A kovil dedicated to Goddess Kannakki Amma.
Situated in Mullaitivu, Vattappalai Kannakki Amman Temple is dedicated to Goddess Kannakki Amma. According to Karna legend, Kannaki from Madurai arrived in Sri Lanka and rested in ten different places. The tenth place she visited was named Paththam-Palai (Paththam – tenth, Palai – residence). Over time the name evolved to Vattappalai. Vattapalai Amman is believed to be a deity of myths, mysteries and miracles. Vaikasi Visakam Pongal Thiruvilla is the main festival, which is held in May.Vattapalai Kannaki Amman Temple, one of the most revered and respected sacred places of the Hindus, both living here and abroad had been holding this festival on a low profile during the 30 year long terrorist war, but the peace dividends prevailing in the past four years, have enabled Kovil Trustees to have it on a grand scale this time, attracting many foreigners
As the Pongal festival was about to begin, Sri Lanka Air Force helicopters sprinkled flowers from above and sanctified the event further, amidst loud religious prayers of the devotees as flowers started settling Similarly, the SFHQ - MLT has earlier offered its expertise and assistance for the construction of temporary toilets and the uninterrupted supply of electricity to the entire area considering the large crowds entering all over the area
By 4.30 p.m. (local time), Army troops operating from many places have served free meals to about 27,270 devotees who reached those ‘Dansel’ from different ends since this morning. Similarly, more than 20 water bowsers of the Army with drinking water, have been stationed in and around the area, in view of the large numbers, still flocking to pay respect...
Read moreவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு ------------------------------------------------------------------------------
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.
கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் ஷபத்தினித் தெய்யோ என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.
கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இங்ஙனம் இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.
கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.
“பெரிய வதிசயமுடனே பேண்ணணங்கு மிலங்கை நண்ணி சரியரிய வரங் கொடுத்துத் தார்குழல் வற்றாப்பளையில் மருவியிருந்த தருள் கொடுத்த வளர்கதிரை மலையணுகி”
கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய்பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது.
ஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.
வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.
“முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால் பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும் பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய் தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில் வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.
அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய் அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய் பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய் அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார் பாங்கான கண்களோ ராயிரமுண்டு…”
எந்தனுக்குப் பசியதிகம் என்றாய் பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.
கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.
இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும்...
Read moreVattapalai Kannaki amma temple is located in Vatta palai in Mullaitivu district. (5Km away from Mullaitivu Town) Every year there is an celebration on 'Vaikaasi Visakam'. Vattapalai Amman is believed to be a deity of myths, mysteries and miracles. Vaikasi Visakam Pongal Thiruvilla is the main festival, which is held in May. Vattapalai Kannaki Amman Temple, one of the most revered and respected sacred places of the Hindus, both living here and abroad had been holding this festival on a low profile during the 30 year long civil war, but the peace dividends prevailing in the past four years, have enabled Kovil Trustees to have it on a grand scale this time, attracting many foreigners. *Parking available *Toilet available *Veg restaurant available...
Read more